”பந்த்” சேதத்திற்கு ரூ.5.20 கோடி நஷ்ட ஈடு வழங்க பிஎப்ஐக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

0 5207

5 கோடியே 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவிற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மீதும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையை எதிர்த்து நடத்தப்பட்ட ”பந்த்”தின் போது ஏற்பட்ட சேதத்திற்கு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த தொகையை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நஷ்ட ஈடு வழங்கும் வரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், நஷ்டஈடு வழங்கவில்லை என்றால் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments