பிரம்மபுத்திரா நதியில் சென்ற படகு நீரில் கவிழ்ந்து விபத்து-காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்

0 2405

அசாமில், பிரம்மபுத்திரா நதியில் சென்ற படகு திடீரென கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி காணாமல் போன அரசு அதிகாரி உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

துப்ரி மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் ஏற்பட்ட அரிப்பு குறித்து ஆய்வு நடத்த, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் படகில் சென்றனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த சுமார் 30 பேர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். பலர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments