திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் - இபிஎஸ்

0 2567

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை தடுத்து நிறுத்துவது தான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பியுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் என்றார்.

விலைவாசி மற்றும் மின்கட்டண உயர்வை கண்டித்து சிவகாசி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.

பெண்கள் இலவசப் பேருந்து சேவை குறித்து அமைச்சர் பொன்முடி பேசியதை குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிகார போதையில் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசி வருவதாக தெரிவித்தார்.

மேலும் நீட் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடமிட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments