சேறும் சகதியுமான அரசு நடுநிலைப்பள்ளி.. மாணவர்கள் செங்கற்கல்லை வைத்து நடந்து செல்லும் அவல நிலை..!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மணலி புது நகர் நடுநிலை பள்ளி வளாகம் மழையால் சேரும் சகதியுமாக காணப்படுகின்றது
மாணவ மாணவிகள் சகதியின் மீது செங்கற்கல்லை வைத்து நடந்து செல்லும் நிலையில் சிலர் வழுக்கி கீழே விழுந்து விடுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
பெரும் மழைக்கு முன்பாக இந்த பள்ளி வளாகத்தை மண் கொட்டி நிரப்ப தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Comments