சென்னை ஓட்டேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழப்பு

0 2315

சென்னையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் தாக்கியதாக கூறப்படும் புகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அயனாவரம் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவரை கடந்த 21-ம் தேதி இரவு 7 மணியளவில் விசாரணைக்காக ஓட்டேரி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.

தீவிர விசாரணைக்கு பின்னர் மயங்கிய நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஆகாஷை அவரது குடும்பத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

போலீசார் தாக்கியதால் மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் ரவுடி ஆகாஷின் பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆகாஷை தாக்கவில்லை என ஓட்டேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments