வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தாசில்தார் எனக்கூறி 3 சவரன் நகையை திருடிச்சென்ற டிப் டாப் பெண்

0 2300

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தன்னை தாசில்தார் எனக்கூறி பெண் ஒருவரிடம் 3 சவரன் செயினை திருடிச் சென்ற டிப் டாப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான எல்லாம்மாள் என்பவர் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தன்னை ஊத்துக்கோட்டைக்கு புதிதாக வந்துள்ள தாசில்தார் எனக்கூறி பேசத்தொடங்கியுள்ளார்.

எல்லாம்மாளிடம் முதியோர் உதவித்தொகை பெற செல்போனில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதால் அணிந்திருக்கும் செயினை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளார்.

3 சவரன் செயினை கழற்றி அருகில் வைத்ததும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார் டிப் டாப் பெண் ஆசாமி. எல்லாம்மாள் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றதும் செயினை எடுத்துக்கொண்டு அந்த பெண் இருசக்கர வானத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments