தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

0 2058

கிருஷ்ணகிரி ஊத்தங்கரையை அடுத்த கொடமாண்டபட்டியில் தென்னை மரத்தில் ஏறிய மரம் ஏறும் தொழிலாளி மணிகண்டன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பி மரத்தை உரசிக் கொண்டிருந்தது தெரியாமல் தேங்காய் பறிக்க ஏறிய மணிகண்டன் மின்சாரம் தாக்கியதில், மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு உயிரிழந்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments