மரம் வளர்க்கும் திட்டத்தில் முறைகேடு இல்லை என நிரூபித்தால் மார்க்சிஸ்ட் கம்யூ., அரசியலை விட்டு விலக வேண்டும் - திண்டுக்கல் சீனிவாசன்!

0 2493

திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மரம் வளர்க்கும் திட்டத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என நிரூபித்தால், தன் மீது புகாரளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசியலை விட்டு விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மலைக்கோட்டையில் மரம் வளர்க்கும் திட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் 50 லட்ச ரூபாய் வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்திருந்த நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments