திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கேரள நடிகைகளை சுற்றிவளைத்து பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள்!

0 5168

கேரளாவில் கோழிக்கோட்டில் நடைப்பெற்ற திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் மலையாள நடிகைகள் கூட்டத்தில் சிக்கி பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.

அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் திரைப்படத்திற்கு பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகைகள் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினர். இதை பயன்படுத்தி சில ரசிகர்கள் நடிகைகளிடம் அத்துமீறினர்.

இந்த பாலியல் தொந்தரவுக்கு கண்டனம் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை, நடந்த சம்பவத்தை சொல்லவே அசிங்கமாக உள்ளது என்றும், இப்போது அவர்களது நோய் தீர்ந்து விட்டதா என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட 2 நடிகைகளிடம் விசாரித்தறிய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments