மகளிர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

0 3647
மகளிர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது சரமாரி தாக்குதல்

சென்னையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை பெண்கள் சரமாரியாக தாக்கி பிடித்து கொடுத்தனர்.

கீழ்பாக்கம் பகுதியிலுள்ள பெண்கள் விடுதி ஒன்றில், யாருக்கும் தெரியாமல் சம்பவத்தன்று இரவு புகுந்த ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், உறங்கிக் கொண்டிருந்த இரு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

அவர்கள் எழுந்து சத்தமிட்ட நிலையில் தனது செல்போனை தவறவிட்ட ஸ்ரீகாந்த் அதனை எடுக்க மீண்டும் சென்றபோது அவனை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments