ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

0 2454
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட சம்பவங்களால் சிலர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதல் பெற்று, அவசர சட்டத்தை அமல்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments