சுருளி அருவியில் 54 நாள்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி.!

0 2382

தேனி மாவட்டம் கம்பம் அருகேவுள்ள சுருளி அருவியில் 54 நாள்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதியளித்துள்ளது.

வெள்ளப் பெருக்கு காரணமாக, வனப்பகுதியில் இருக்கும் அந்த அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது. இதனால் அருவி செல்லும் வழியில் உள்ள ஓடையில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.

தற்போது நீர்வரத்து குறைந்த காரணத்தால், சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் வனத்துறை அனுமதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments