ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீவிரம்.!

0 2610

ராஜஸ்தானில் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதால், தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, முதலமைச்சர் பதவியைப் பிடிக்க துணை முதலமைச்சர் சச்சின் பைலட், சபாநாயகர் சி.பி. ஜோஷி ஆகியோர் கடுமையாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுவதால், மேலிடப் பிரதிநிதியாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொதுச்செயலாளர் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் விரைந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments