கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை.. பேருந்துகள், ஆட்டோ, கார்கள் மீது கல்வீச்சு தாக்குதல்.. 500 பேர் கைது!

0 4432

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, 900 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேருந்துகள் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் என்று வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்

பெட்ரோல் குண்டுகளை பைக்கில் வீச முயற்சித்த சிலரை கைது செய்து உள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், ஆழப்புழா, கண்ணூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் பேருந்துகள் சேதமடைந்தன. திருவனந்தபுரத்தில் ஆட்டோக்கள் கார்கள் மீதும் கற்கள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments