உள்நாட்டு போரால் கல்வி கற்க இயலாதோர்க்கு தற்காலிகப்பள்ளி: சேவை நோக்கில் கற்பிக்கும் வரலாற்றுப் பட்டதாரி ஆசிரியை

0 2945

சிரியாவின், இத்லிப் நகரில் வரலாற்றுப் பட்டதாரி ஆசிரியை நஜ்லா மைமர், உள் நாட்டு போரால் கல்விக் கற்க இயலாமல் போன மாணவர்களுக்காக தற்காலிகப் பள்ளியை நடத்தி வருகிறார்.

பண்டைய பைசண்டைன் கோட்டையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலம் பெயர்ந்த பெண் தன்னார்வலரின் உதவியுடன் பள்ளி நடத்தப்படுகிறது. ஒரு சிலர் கொடுக்கும் சிறிய பணத் உதவிகளைக் கொண்டு பள்ளியைத் தொடர்ந்து நடந்து வருகிறது.

இங்கு நான்கு முதல் ஐந்து வயதுடைய சிறுவர், சிறுமியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு அரபு, ஆங்கிலம், கணக்கு பாடங்கள் கற்று கொடுத்து வருவதாக ஆசிரியை நஜ்லா மைமர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments