வேறொரு பெண் என தவறுதலாக புதைக்கப்பட்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் மீண்டும் ஒப்படைப்பு.!

0 4037

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் வேறொரு பெண் என தவறுதலாக புதைக்கப்பட்டவரின் உடல் அடையாளம் காணப்பட்டு அவரது உறவினர்களிடம் மீண்டும் இறுதிச்சடங்கிற்காக ஒப்படைக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி சந்திரா காணாமல் போன நிலையில், ஊரப்பாக்கம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்தவர் அவர் தான் என, அவரது மகன் அடையாளம் காட்டிய நிலையில், உடலை பெற்று அடக்கம் செய்துவிட்டனர்.

மறுநாள் சந்திரா உயிருடன் வீட்டிற்கு வந்ததால், அதுகுறித்து, தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து அவரது அடையாளத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கினர். தனிப்படை அமைக்கப்பட்டு காவல் நிலையங்களில் பதிவாகியிருந்த காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரித்துபோது, உயிரிழந்த பெண் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பத்மா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் நல்லடக்கத்திற்காக உடல் ஒப்படைக்கப்பட்டது. v

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments