இந்தியா-சீனா விவகாரத்தில் தலையிட மாட்டோம் - ரஷ்யா

0 3843

இந்தியா-சீனா விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், இந்தியாவும், சீனாவும் தங்களிடையேயான பிரச்சினையை பேச்சுவார்த்தை  நடத்தி விரைந்து அமைதி தீர்வு காண வேண்டும் என்றும், இதுதான் அந்த 2 நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியா- சீனா நாடுகளிடையேயான இருதரப்பு விவகாரத்தில் ரஷ்யா தலையிட விரும்பவில்லை என்று கூறிய அவர், எஸ் 400 ஏவுகணை இடைமறிப்பு அமைப்பை திட்டமிட்டபடி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்கும் என்றும்  குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments