ரூ.3 கோடி இழப்பீடு கோரி கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.!

0 6901

3 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்  சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் என்பவரால் 2016ம் ஆண்டு சுவாதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் சுவாதியின் பெற்றோர்,   ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி மரணம் நேரிட்டது என்று கூறி, இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியன், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய  அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments