சாலையில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்களை வேகமாக வந்து அடித்து தூக்கிய கார்..!

0 9191

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களிடையே மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் மோதியதில் 2 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

அங்குள்ள மசூரி என்ற இடத்தில் மாணவர்களின் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டிருந்த நிலையில் வேகமாக வந்த கார் மோதியதில் 2 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இருப்பினும் அவர்கள் சண்டையை நிறுத்தவில்லை.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்ததால், மாணவர்கள் தப்பித்து ஓடினர். சில மாணவர்களை பிடித்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் மீது மோதிய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments