கடலூரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது.!

0 4553

கடலூரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவர் தனது 14 வயது மகளுக்கு கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 24 வயது தீட்சிதருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், சோமசேகரிடம் விசாரணை மேற்கொண்ட டெல்டா பிரிவு போலீசார் தொடர்ந்து, அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதியானதை அடுத்து வழக்குப்பதிந்து தீட்சிதர் சோமசேகரை கைது செய்த போலீசார், தலைமறைவான மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments