பட்டாக் கத்தியை ஏந்தி மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்கள்..!

0 5374

சென்னையில் ஓடும் ரயிலில் படிகட்டில் தொங்கியப்படியே ஆபத்தான பயணம் மேற்கொண்டும், பட்டாக் கத்தி ஏந்தியும் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்களால் பயணிகள் அச்சமடைந்தனர்.

வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். பட்டாக் கத்தியை நடைமேடையில் சுழற்றிக் கொண்டே உரசியடிபடியும், ரயில் பெட்டியில் தட்டியபடியே கூச்சலிட்டும் வந்துள்ளனர்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அட்டகாசத்தில் ஈடுப்பட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments