மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்களை மீட்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 2828
மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 300 இந்தியர்களை மீட்க பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மியான்மர் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து சென்றதும், பிறகு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை செய்வதற்காக, மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த வேலையை செய்ய மறுப்பதால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது என்றும், 17 தமிழர்கள் மாநில அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments