குப்பைத் தொட்டியில் ஆணின் இடதுகை மீட்கப்பட்ட விவகாரம்.. ஈரோட்டை சேர்ந்தவரின் கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை!

0 2216

கோவை மாவட்டம் துடியலூர் அருகே குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடதுகை மீட்கப்பட்ட விவகாரத்தில், ஈரோட்டை சேர்ந்த பிரபு என்பவரது கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டியில் தங்கிருந்த பிரபு, காந்திபுரம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி அவரை காணவில்லை என மனைவி காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், பிரபு மாயமான நேரமும் மற்றும் கை மீட்கப்பட்ட நேரமும் ஒத்துப்போவதால் கைரேகை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments