கனியாமூர் பள்ளிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர், புகைப்பட கலைஞர் மீது தாக்குதல்

0 3215
கனியாமூர் பள்ளிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர், புகைப்பட கலைஞர் மீது தாக்குதல்

கள்ளக்குறிச்சி கனியாமூரில் கலவரத்தால் சேதமான தனியார் பள்ளிக்கு சென்ற வார இதழ் ஒன்றின் செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் தாக்கப்பட்டது தொடர்பாக 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலவரத்தால் சேதமான அப்பள்ளியின் சீரமைப்பு பணி குறித்து செய்தி சேகரிக்க பிரகாஷ் என்பவரும், அஜீத்குமார் என்ற புகைப்படக் கலைஞரும் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்து, பள்ளித் தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள் சுபாஷ் மற்றும் அவருடன் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர், அவர்கள் அங்கிருந்து சேலம் நோக்கி காரில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தலைவாசலில் மீண்டும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments