ரவுடியை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்ததற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

0 1917
ரவுடியை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்ததற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் ரவுடியை காவல்நிலைய ஜாமீனில் விடுவித்ததற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

சமுட்டிக்குப்பத்தைச் சேர்ந்த ரவுடியான ஸ்ரீகாந்த் என்பவரை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 5 நாட்களுக்கு முன்பு கைது செய்துள்ளார்.

அப்போது ஸ்ரீகாந்திற்கு உடற்தகுதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்ததால் ஜாமீனில் விடுவிக்க 5ஆயிரம் ரூபாய் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஸ்ரீகாந்த் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்ததை அடுத்து அவர்களின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 5ஆயிரம் ரூபாயை ஷியாம் சுந்தரிடம் கொடுத்த போது பிடிபட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments