மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த ராணுவ வீரர் கைது.!
தேனி மாவட்டம் போடி அருகே மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
சில்லமரத்துப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் ரங்கநாதனுக்கு கற்பகம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே வீட்டு பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியால் ரங்கநாதன் மனைவியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் கற்பகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments