அடிப்படை வசதி பற்றாக்குறையால் இரு அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே மோதல்

0 3014
அடிப்படை வசதி பற்றாக்குறையால் இரு அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே மோதல்

புதுச்சேரியில் இரு அரசு பள்ளி மாணவிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி, சுப்ரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியின் மேல்கூறை இடிந்து விழுந்ததால் இப்பள்ளி மாணவிகள் குருசுகுப்பம் என்.கே.சி அரசு பெண்கள் பள்ளியில், தற்காலிகமாக படித்து வந்தனர்.

வெள்ளிக்கிழமை 12-ஆம் வகுப்பு படிக்கும் இவ்விரண்டு பள்ளி மாணவிகளும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்

நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சேதமடைந்த அரசு பள்ளியை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments