ஐடி ஊழியர் வீட்டில் 95 சவரன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.10 லட்சம் கொள்ளை.!

0 2876

மதுரை மாவட்டம் மேலூரில் ஐடி ஊழியர் வீட்டில் 95 சவரன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் பிரபுசங்கர் பெங்களூரில் தங்கி பணியாற்றி வரும் நிலையில்,  மேலூரில் உள்ள இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பின் பக்க ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரபுசங்கரின் மாமனார் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அவர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் முகமூடி அணிந்தபடி வந்த 6 பேர் கொண்ட வட மாநில கொள்ளை கும்பலை அடையாளம் கண்டு தேடிவருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments