கொடைக்கானலில் பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் சீசன் துவக்கம்..!

0 3595

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பட்டர் புரூட் எனப்படும் அவகோடா பழங்கள் சீசன் துவங்கியிருப்பதால் விளைச்சல் அதிகரித்துள்ளது.

பெருமாள்மலை, குண்டுப்பட்டி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் விளைச்சல் அதிகரித்து சந்தையில் ஒரு கிலோ 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீசன் துவங்கி அதிக மகசூல் கிடைக்கும் இச்சமயத்தில் மஞ்சள் நோய் தாக்கி அவகோடா மரங்கள் அழிந்து வருவதாக தெரிவிக்கும் மலைக்கிராம விவசாயிகள், நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments