காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை!

0 13222

சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் திரைப்பட நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருகம்பாக்கம் மல்லிகை  அவென்யூவில் உள்ள வீட்டில்   29 வயதான தீபா என்கிற பவுலின், தனியே வசித்து வந்தார். வாய்தா என்ற பட  நாயகியாகவும், மேலும் சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அவர் நடித்துள்ளார்.

நேற்று மதியம் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள அவருடைய சகோதரர் ரமேசின் செல்போன் எண்ணை ஆண் நண்பர் பிரபாகரன் என்பவர், தொடர்பு கொண்டு, மின் விசிறியில் தீபா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார்  விசாரணை நடத்தியபோது, தீபா தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உயிருக்கு உயிராக தாம் ஒருவரை  காதலித்ததாகவும், அக்காதல்  கைகூடாததால் உலகத்தை விட்டு செல்வதாகவும் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments