பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் போக்சோவில் கைது

0 2981
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் போக்சோவில் கைது

கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவளித்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு அவரது வீட்டருகே இருக்கும் கட்டிட தொழிலாளியான கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் மாணவி பள்ளியின் முதல் மாடியிலிருந்து குதித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மாணவி அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்த அய்யம்பேட்டை போலீசார் கண்ணனை போக்சோவில் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments