போக்சோவுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!

0 2604

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டதால், அந்த இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சி.எல்.காலனியை சேர்ந்த 21 வயதான இளைஞர் திருநாவுக்கரசு, கடந்த 14ஆம் தேதி மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் திருநாவுக்கரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments