பெரியார் பிறந்த நாள் விழாவின்போது திராவிடர் கழகம் - பா.ஜ.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்.. 18 பேர் கைது!

0 3466

தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவின்போது திராவிடர் கழகம் - பா.ஜ.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காந்தி சிலை அருகே விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த பா.ஜ.க.வினர் சிலர், அப்பகுதி தேரடி என்பதால் அது போன்ற விழாக்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அனுமதி பெற்றுதான் நிகழ்ச்சி நடத்துவதாக திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். அப்போது, இருதரப்பினரும் முழக்கங்கள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

இருப்பினும் மோதல் சூழல் நிலவிய நிலையில், பா.ஜ.க.வினர் 18 பேரை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments