குழந்தைகளிடம் சாதிப் பாகுபாடு காட்டிய விவகாரம் ; இருவர் கைது, மளிகைக் கடைக்கு சீல்

0 2066
குழந்தைகளிடம் சாதிப் பாகுபாடு காட்டிய விவகாரம் ; இருவர் கைது, மளிகைக் கடைக்கு சீல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒரு சமூகத்தை சேர்ந்த குழந்தைகளிடம் சாதிப் பாகுபாடு காட்டப்பட்ட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மளிகைக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

பாஞ்சாகுளம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக இரு பிரிவை சேர்ந்தவர்களிடையே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம், அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வந்த குழந்தைகளிடம் ஊர் கட்டுப்பாடு காரணமாக உங்களுக்கு தின் பண்டங்கள் தரமுடியாது என ஒருவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இருபிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments