டிஜே பார்ட்டியில் மகளிருக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார் விடுதி மீது புகார்!

0 2816

திருப்பூரில் டிஜே பார்ட்டியில் மகளிருக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார் விடுதி மீது திருப்பூர் மாநகராட்சி மேயர் போலீசில் புகாரளித்துள்ளார்.

திருப்பூர் மங்கலம் சாலையிலுள்ள, தனியார் விடுதியில் இன்று இரவு நடைபெறவிருந்த டிஜே பார்ட்டியில் தம்பதியாக வருபவர்களுக்கும், மகளிருக்கும் அனுமதி இலவசம் எனவும், மகளிருக்கு மதுபானம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தால் விடுதி நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் நாட்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்க தனியார் விடுதியை கண்காணிக்குமாறு காவல் ஆணையரிடம் திருப்பூர் மாநகராட்சி மேயர் புகார் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments