குடிபோதையில் நண்பனை சுத்தியால் அடித்துக் கொன்ற நபர் போலீசில் சரண்

0 2815

திருவேற்காடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சுத்தியால் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் 2 நாட்கள் இருந்த நபர் போலீசில் சரணடைந்தார்.

ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகனின் வீட்டில், சுரேஷ் என்பவர் தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நண்பர்களான இருவரும் புதன்கிழமை இரவு வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் முருகன், சுரேஷை சுத்தியால் பின் மண்டையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்துடனே இருந்த முருகன், சடலத்தை அப்புறப்படுத்த முடியாததால் நேற்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில், வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த சுரேஷின் சடலத்தை போலீசார் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments