தங்க நகை வியாபாரிகளை துப்பாக்கி முனையில் தாக்கி பணம் கொள்ளை.. சிக்கிய கொள்ளையர்களை கட்டிவைத்து அடித்து உதைத்த மக்கள்..!
கர்நாடகத்தைச் சேர்ந்த தங்க நகை வியாபாரிகளான பாலாஜி, சிராஜ் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து வியாபாரிகளை கடுமையாக தாக்கியதுடன் சிராஜ்ஜை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறித்துச்சென்றனர்.
அக்கம்பக்கத்து கிராம வாசிகள் உதவிக்கு வந்ததால் சிக்கிக்கொண்ட கொள்ளையர்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களிடமிருந்து ஏர்கன்னை கைப்பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் தப்பியோடிய 8 பேரை தேடி வருகின்றனர்.
Comments