இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போலியாக போட்டதாக குற்றச்சாட்டு.. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

0 2878

நெல்லை மாவட்டம் முக்கூடலில் இன்ஸ்பெக்டர் கையெழுத்தை போலியாக போட்டதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பத்தமடை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ராமமூர்த்தி என்பவர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு முக்கூடல் காவல் ஆய்வாளர் கோகிலாவின் கையொப்பம் மற்றும் முத்திரை பதிந்து போலியாக பத்திரம் தொலைந்தது குறித்த சான்று கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் முக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments