உத்தரப் பிரதேசத்தில் 2 தலித் சகோதரிகள் கொலை வழக்கு: 6 பேர் கைது

0 2736

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி மாவட்டத்தில் இரண்டு பதின்வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

17 மற்றும் 15 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து பெரும் கொந்தளிப்பான நிலை உருவானது. போராட்டங்கள், அரசியல் சர்ச்சைகள் வெடித்தன.

இந்நிலையில் போலீசாருக்கு உத்தரப்பிரதேச அரசு சுதந்திரமாக செயல்பட உத்தரவிட்டது.

உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து 6 பேரை கைது செய்துள்ளனர்.இதில் இரண்டு பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments