குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடதுகை கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு

0 4013
குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடதுகை கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு

கோவை மாவட்டம் துடியலூர் அருகே குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் இடதுகை கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளக்கண்ணர் பிரிவு பகுதியில் தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த போது, அங்கு பிளாஸ்டிக் பையில் ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட ஆணின் கை கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கையை கைப்பற்றினர். மேலும், உடலின் மற்ற பாகங்கள் அருகில் வீசப்பட்டுள்ளனவா? என தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments