வைகை கரையோரம் ரவுடி குத்தி கொலை.. போலீசார் விசாரணை.!

0 4437
வைகை கரையோரம் ரவுடி குத்தி கொலை.. போலீசார் விசாரணை.!

மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற வெள்ளை மணி இன்று அதிகாலை அருள்தாஸ்புரம் வைகைக் கரையோரம் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார்.

கத்தியால் குத்தப்பட்டும், கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டிருந்த மணி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. செல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தடயங்களை சேகரித்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments