சம்பள பாக்கிக்காகக் காவல் நிலையத்தில் தீக்குளித்த ஓட்டுநர்.. 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை!

0 2568

சென்னை, சூளைமேடு காவல் நிலையத்தில் சரக்கு வாகன ஓட்டுனர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஓட்டுனர் சுரேஷ், கடந்த சில வருடங்களாக, நந்தகோபால் என்பவரிடம் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த நிலையில் பல மாதங்களாக நந்தகோபால் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் போதையில் இருந்த அவர் தீ குளித்தது தெரியவந்தது.

சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுகுறித்து சூளைமேடு போலீசார் நந்தகோபால், சுரேஷ், கணேஷ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments