தமிழகத்தில் இன்புளுன்ஸா வைரஸ் காய்ச்சலால் 282 பேர் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 3002

தமிழகத்தில் H1 N1 இன்புளுன்ஸா வைரஸ் காய்ச்சலால் 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த காய்ச்சல் கடந்த 2 ஆண்டுகளாக முகக்கவசம் உள்ளிட்டவை பின்பற்றப்பட்டதால் குறைவாக இருந்ததாகவும், தற்போது சற்று அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் ஏற்படும் காய்ச்சல் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மருத்துவமனைகளில் காய்ச்சலால் குழந்தைகள் அதிகம் அனுமதிக்கப்படுவதாகவும், படுக்கைகள் இல்லாமல் மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும் கூறுவது தவறானது என்றும்  விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments