கனியாமூர் கலவரத்தில் தொடர்புடைய மேலும் இருவர் கைது.!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் வடக்கனந்தலை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியபின் அவர்களை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments