ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!
ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் நொவ்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகளுடன் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அய்ஜாஸ் ரசூல் நாசர் மற்றும் ஷாகித் அகமது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இருவரும் வெளிமாநில தொழிலாளி ஒருவரை சுட்டுக் கொன்ற தீவிரவாத செயலில் தொடர்புடையவர்கள் என்றும் விசாரணை மூலம் போலீசார் கண்டறிந்தனர்
Comments