பெண் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி முதியவருக்கு காதல் வலை வீசி 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது.!

0 2167

சென்னையில், பெண் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி முதியவருக்கு காதல் வலை வீசி 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தையாள்பேட்டை காவல் நிலையத்தில் திருச்சியை சேர்ந்த முகமது அல்டாப் அளித்த புகாரில், தனது தந்தை சிராஜீதீனிடம் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் முகநூலில் பெண் போல பேசி பழகி, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பெற்று, அதனை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிக்க முயன்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 லட்சம் ரூபாய் பணம் பணம் கேட்டு மிரட்டிய ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments