விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தில் உதவிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவி.!

0 2530

செகந்திராபாத் துரந்தோ விரைவு ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவத்தில் உதவிய இறுதி ஆண்டு மருத்துவ மாணவியின் செயல் அனைவரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் நேற்று முன்தினம் ரயிலில் பயணம் செய்துள்ளார். அதே பெட்டியில் மருத்துவ மாணவி ஒருவரும் பயணம் செய்துள்ளார்.

ஓடும் ரயிலில் திடீரென அந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, சக பயணிகள் என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது, இறுதியாண்டு மருத்துவ மாணவி பாதுகாப்பாக குழந்தையை பெற்றெடுப்பதற்கு உதவி செய்தார்.

இதனைத் தொடர்ந்து, ரயில் அனகாபள்ளி ரயில் நிலையத்தை அடைந்ததும் சக பயணிகள் இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பிரசவத்திற்கு பின்னர் தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments