சாலையோரம் நின்ற ஆம்னி வேன் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, ஒருவர் காயம்

0 2489
சாலையோரம் நின்ற ஆம்னி வேன் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, ஒருவர் காயம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வளைவில் வேகமாக திரும்பியபோது அதிக பாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஆம்னி வேன் மீது சிமெண்ட் லோடு லாரி கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 7 பேர் சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு, வேனில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். டீ குடிப்பதற்காக ஆம்னி வேன், வாத்தலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, காருக்குள் குழந்தையுடன் 3 பேர் மட்டும் இருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து வந்த டாரஸ் லாரி, அந்த வேன் மீது கவிழ்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments