மஸ்கட்டில் இருந்து கொச்சி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ ; அலறியடித்துக் கொண்டு வெளியேறிய பயணிகள்

0 2100
மஸ்கட்டில் இருந்து கொச்சி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ ; அலறியடித்துக் கொண்டு வெளியேறிய பயணிகள்

மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் 2வது என்ஜினில் தீப்பற்றி புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானத்தில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 141 பயணிகளும், 6 பணியாளார்களும் அவசரகால வழி மூலம் விரைவாக இறங்கினர்.


அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாவும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments