சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்பு!

0 2425

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்தார்.

அதன்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி துரைசாமி, தலைமை நீதிபதிபதியின் நீதிமன்ற அறையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்.

முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி துரைசாமி, இரண்டாம் முறையாக அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.

இவர், வரும் செப்டம்பர் 21ம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments